மேலும்

புலிகளுக்கு ஏவுகணைகளை வாங்க முயன்ற மூவருக்கான சிறைத்தண்டனை குறைப்பு

விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஈழத் தமிழர்களின் தண்டனைக் காலத்தை புரூக்லின் நீதிமன்றம் குறைத்துள்ளது.

பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய பெண்ணை உடன் நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவு

மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற பெண்ணை உடனடியாக நாடுகடத்த கொழும்பு  மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார்.

9 ஆவது ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார் அன்ரனியோ குட்ரேரெஸ்

அடுத்த ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்ரேரெஸ் நேற்று ஐ.நா பொதுச்சபையினால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகை குறித்து பேச பிரசெல்ஸ் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியம் செல்லவுள்ளார்.

தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசின் கப்பலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2508 தமிழ் அகதிகள்

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக இருக்கும் நிலையில், இவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்தியா அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர்.

கோத்தா மீதான வழக்கு – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான கொள்கை, சட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை.

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கைப்பற்ற இந்தியா வியூகம்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்திய கொள்கலன் கூட்டுத்தாபனம், கூட்டு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.