மேலும்

9 ஆவது ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார் அன்ரனியோ குட்ரேரெஸ்

antonio-guterres-1அடுத்த ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்ரேரெஸ் நேற்று ஐ.நா பொதுச்சபையினால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்பதாவது ஐ.நா பொதுச்செயலராக தெரிவு செய்யப்பட்டுள்ள 67 வயதான அன்ரனியோ குட்ரேரெஸ், வரும் 2017 ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம், ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்.

1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த அன்ரனியோ குட்ரேரெஸ், 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராகவும் பதவி வகித்திருந்தார்.

கடந்த வாரம் ஐ.நா பாதுகாப்புச் சபை, அடுத்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கு அன்ரனியோ குட்ரேரெசை நியமிக்க ஒருமனதாகப் பரிந்துரைத்திருந்தது.

இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட ஏனைய 12 பேரையும் பாதுகாப்புச்சபை நிராகரித்திருந்தது. இவர்களில் 7 பேர் பெண்களாவர்.

இந்த நிலையில், நேற்று ஐ.நா பொதுச்சபையில், அன்ரனியோ குட்ரேரெஸ் ஒருமனதாக ஒன்பதாவது ஐ.நா பொதுச்செயலராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கு அன்ரனியோ குட்ரேரெஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதை, தற்போதைய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். இந்தப் பதவிக்கு மிகப் பொருத்தமான தெரிவு அன்ரனியோ குட்ரேரெஸ் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *