மேலும்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே மாவீரர்கள் கனவை நனவாக்கும்! – ருத்ரகுமாரன்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும். அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள மாவீரர் நாள் செய்தியில் தெரிவிததுள்ளார்.

சிறிலங்கா குறித்த ஐ.நாவின் நிலைப்பாடு மாறாது – பர்ஹான் ஹக்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் விடயத்தில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

அதிரடிப்படை முன்னாள் கட்டளைத் தளபதி கைது – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்கா காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“ மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவியுங்கள்”- ட்ரம்பிடம் தஞ்சமடையும் சிறிலங்கா அதிபர்

மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

காவல்துறை தடைகளை மீறி தீபம் ஏற்ற தயாராகிறது கூட்டமைப்பு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா காவல்துறை உத்தரவுகளை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 14ஆம் நாள், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

விதையாக வீழ்ந்தோரின் நினைவில்

மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.

யாழ்., வன்னியில் மாவீரர் நாளுக்குத் தயாராகும் துயிலுமில்லங்கள்

கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

கியூபாவின் முன்னாள் அதிபரும், இடதுசாரிப் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் மரணமானதாக அந்த நாட்டின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.