மேலும்

சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.

பதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா

கச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு

துப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறைமையுள்ள நாட்டைக் கட்டுப்படுத்தாது – சிறிலங்கா

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்

அம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர்

சபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..! புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.

தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

ஜகார்த்தா வரை எதிரொலித்த தமிழ்நாடு மீனவர் படுகொலை விவகாரம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா – விசாரணை நடத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உறுதி

கச்சதீவுக் கடலில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது.