மேலும்

அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.

சிறிலங்கா பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா பிரதமர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் பழுதடைந்து நிற்கும் இந்தியப் பிரதமரின் சிறப்பு உலங்குவானூர்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா

சிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

சீனா சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்

மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு  ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.