தெரியாத தேவதையா – தெரிந்த பிசாசா? : ஈழத்தமிழ் மக்கள் தமது வாக்குகளை யாருக்கு வழங்குவார்கள்?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் தற்போது ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் காணப்படுகிறது.