மேலும்

பிரிவு: செய்திகள்

2020இல் சிறிலங்காவில் புகையிலை உற்பத்திக்குத் தடை

சிறிலங்காவில் புகையிலை உற்பத்தி வரும் 2020 ஆண்டில் முற்றாகத் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எனது ஆணையை மீறியே காங்கேசன்துறையில் இருந்து இரும்பு எடுத்துச் செல்லப்பட்டது – தயா ரத்நாயக்க

இராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா பிரதமர்

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் – பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ளது வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம்

கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்ற மோசடி- முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

மோடி, சுஸ்மாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றிரவு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மத்தல விமான நிலையம் இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ளது – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம்இந்தியாவிடம் கையளிக்கவுள்ளதாக கூட்டு எதிரணி் குற்றம்சாட்டியுள்ளது.