மேலும்

பிரிவு: கட்டுரைகள்

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் – பாகம் : 2

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும், அரசியல் அமைப்பு மாற்றத்தையும் ஊக்கப்படுத்தும் சில மேலைதேய இராஜதந்திரிகள் அரச உதவியுடன், மக்கட்பரம்பல் சமநிலையை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்

செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு   தாக்கலுக்குரிய நாட்கள்   விரைவில்  அறிவிக்கப்படவுள்ளன.  அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கு  மும்முரமாக தயாராகி வருகின்றன.  இம்முறை  தேர்தலானது புதிய  முறையில்-  வட்டார மற்றும் விகிதாசார முறை என  கலப்பு முறையில்   நடைபெறவுள்ளமையே  சிறப்பு அம்சமாகும்.

எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை

சிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற சமநிலையை மாற்றியமைக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு?

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவராக இருந்தார் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஏனைய குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படக் கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறுகிய ஒற்றையாட்சி மனோநிலை அழிவுகளுக்கே வழிவகுக்கும்

சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கு (SC Spl 03/2014 -Decided on 04/08/2017)  தொடர்பாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிறிலங்கா  உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பானது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது இடம்பெறும் புதிய அரசியலமைப்பு மீதான விவாதமானது, அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது.

கிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்

‘அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

தீவிரமடைந்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடியாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் : பாகம்-1

உலகம் எங்கும் பரந்து வாழும் சமுதாயம் என்பதில் பெருமை கொண்டு வாழ்வது,  தமிழ் சமுதாயம் ஆகும்.  உள்நாட்டு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் நாடுகள் பல கடந்து வாழ்கின்றனர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வேலையாட்களாகவும் போர் வீரர்களாகவும் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாடுகளிலேயே தேசியம் பேசும் சுதேசிகளாக மாறி வாழ்கின்றனர்.

‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான  சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார்.