மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவுக்கு வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

சிறிலங்கா அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்களன்று ஜெனிவா பயணமாகிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்

சமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் மூடிய அறைக்குள் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு

கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் வைபர் தடை நீங்கியது – முகநூலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

நள்ளிரவுடன் நீங்குகிறது வைபர் மீதான தடை

சிறிலங்காவில் வைபர் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று விலகும்?

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முடிவு ஒன்றை எடுப்பார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது

அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.