மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மகிந்தவின் மெய்க்காவலர்களின் 72 வங்கிக்கணக்குகள் குறித்து விசாரிக்க அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மூன்று மெய்ப்பாதுகாவலர்களின்,  வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிநிறுவனக் கணக்குகள் தொடர்பாக விசாரணை செய்ய, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விபத்துக்குள்ளாகி வீழ்ந்தது சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி

சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இன்று முற்பகல் பயிற்சியின் போது வி்பத்துக்குள்ளாகி, பலத்த சேதமடைந்தது.

கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.

ஐந்து நாடுகளின் உதவிப் பொருட்களே சிறிலங்கா வந்தன

சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாடுகள் மாத்திரமே இதுவரை உதவிகளை அனுப்பியுள்ளதாக, சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்

சிறிலங்காவில் அண்மையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை, உயர் பாதுகாப்பு வலயங்களாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணியில் இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்கள்

கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்களும், மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளால் நெருக்கடி

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் படையெடுக்கும் அரசியல்வாதிகளால், மீட்பு மற்றும் உதவிப் பணிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் 2.5 இலட்சம் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா மேலும் இரண்டரை இலட்சம் டொலர்களை (38 மில்லியன் ரூபா) வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சம்பூர் அனல்மின் திட்டப் பணிகள்

சம்பூர் அனல் மின் திட்டப் பணிகளை நிறுத்துவதற்கோ, இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றுவதற்கோ, இந்தியாவின் அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம், எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராட்சத விமானத்தில் 50 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் வந்தன

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய விமானப்படையின் இராட்சத போக்குவரத்து விமானத்தில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்கள், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது.