மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கடற்படை அதிகாரியிடம் கிழக்கு முதல்வர் மன்னிப்புக்கோர வேண்டும் – ரவூப் ஹக்கீம்

சிறிலங்கா கடற்படை அதிகாரியை அவமதித்ததற்காக, அவரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

நோர்வே இராஜாங்கச் செயலர் சிறிலங்கா வருகிறார் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும் அவர் ஜூன் 2ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புலிகள் தோன்றக் காரணமான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை- சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படையினர் வசமுள்ள தமது சொந்த நிலங்கள், மீள ஒப்படைக்கப்படும் என்று, தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கோருமாறு கிழக்கு முதல்வருக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட வேண்டுமாம்

பொது இடத்தில் அவமதிப்புச் செய்தமைக்காக, கடற்படை கப்டன் பிரேமரத்னவிடம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அகமட்டை மன்னிப்புக் கோருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட வேண்டும் என்று, முன்னாள் கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் எச்.ஆர்.அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் அமெரிக்கப் படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று ஈடுபட்டது.

எல்லோருடைய நன்மைக்காகவும் தான் கிழக்கு முதல்வருக்குத் தடை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பங்கேற்கும் நிகழ்வுகளில், முப்படையினரும் பங்கேற்பதை தவிர்க்குமாறு, முடிவு எடுக்கப்பட்டது, எல்லோருடைய நன்மைக்காகவுமே என்று தெரிவித்துள்ளார், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

எக்னெலிகொட வழக்கில் தடுப்பில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல், பிரபோத சிறிவர்த்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீனா – சிறிலங்கா இடையே பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்து

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், 13,800 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கும்.

கட்டுநாயக்கவில் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளார்களில் ஒருவரான, ஆதவன் மாஸ்டர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ

கிழக்கு மாகாண ஆளுனர் நெறிமுறைகளை அறியாது செயற்படுவதாகவும், தனது பணிகளில் தலையீடு செய்வதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ நிராகரித்துள்ளார்.