மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

நோர்வே ‘தமிழ்3’ வானொலி நடாத்தும் நாடக எழுத்துருப் போட்டி

நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வானொலி நாடக எழுத்துருவிற்குரிய போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி அரசுக்கு புதிய நெருக்கடி – கருணா, சஜினுக்கு கடும் எதிர்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரும், முன்வந்துள்ள நிலையில், ஐதேக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

மகிந்தவுக்கு அடுத்த அடி – சுதந்திரக் கட்சித் தலைமை மைத்திரி வசம்

கொழும்பில்  இன்று மாலை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இன்னமும் இருக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் தொடர்ந்தும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தோல்வியை ஒப்புக் கொண்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஒப்புக் கொண்டு இன்று காலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.

வடக்கு, கிழக்கை பிரித்த எஸ்.எல்.குணசேகர மரணம்

சிங்கள பௌத்த கடும்போக்காளரும், சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான எஸ்.எல்.குணசேகர உடல்நலக் குறைவினால் இன்று மரணமானார்.

வங்கிக் கிளைகளின் அடர்த்தியில் வடக்கு மாகாணமே முதலிடம் – சுரண்டப்படும் தமிழர் நிதி

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குப் படையெடுத்த வங்கிகள், கடன்களைக் கொடுத்தும், தமிழர்களின் முதலீடுகளைச் சுரண்டியும் வருவதாக கடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம்

அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல்: உன்னிப்பாக கண்காணிக்கும் அனைத்துலக சமூகம்

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும், அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியுடன் தொடர்பு வைத்திருந்த றோ அதிகாரியின் பதவி பறிபோனது?

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே, கொழும்பில் இருந்த இந்தியப் புலனாய்வு அதிகாரி புதுடெல்லிக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.