மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம்

தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார்.

சிறிலங்காவில் சீனக் கடற்படைத் தளம் அமைய வாய்ப்பு – அவுஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்

கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார்.

சிட்னி பணய நாடகம் முடிந்தது – அகதிகள் மீதான கெடுபிடிகள் இறுகும் வாய்ப்பு

சிட்னியில், உணவகம் ஒன்றில் ஆயுததாரியால் 16 மணிநேரமாக பயணம் வைக்கப்பட்டிருந்தவர்கள், காவல்துறையின் அதிரடித் தாக்குதலில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தையடுத்து அவுஸ்ரேலியாவில் அகதிகள் தொடர்பான கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.

சிட்னியில் பணயம் வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் – சிறிலங்கா அதிபர் கவலை

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய மர்மநபரால் பயணக் கைதியாக பொதுமக்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு)

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு அனைத்துலக சமூகமே காரணம் – ஐ.நா நிபுணர்

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியை தீர்க்க அனைத்துலக சமூகம் குறிப்பாக, சிறிலங்காவின் அயல் நாடுகள் தவறிவிட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர் அடமா டையிங்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

டோவலின் வெளிவராத கொழும்பு சந்திப்பு இரகசியங்கள் – ஆங்கில வாரஇதழ்

சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து, இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேர்தல் காலத்தில் தமிழர்களின் பாதுகாப்பு விடயத்திலும் புதுடெல்லி கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.