மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ரணிலை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை – கூட்டு எதிரணியிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.

மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.

ரணிலை வெளியேற்றுவதில் விடாப்பிடி – நிமாலை பிரதமராக்க முயற்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழில் தேசிய கீதம் பாடியதால் தான் ஐதேகவுக்கு தோல்வியாம் – திலக் மாரப்பன கண்டுபிடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பதவி விலக ரணில் மறுப்பு – மைத்திரியுடனான பேச்சில் இழுபறி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிவு எதுவும் எட்டப்படாமலேயே முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு அரசியலில் பரபரப்பு – தனித்து ஆட்சியமைக்கத் தயாராகும் ஐதேக

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.

வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்

புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மகிந்த அலை – 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.