மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

வேட்புமனு கோரும் அறிவித்தல் செப்.20 இற்குப் பின் எந்த நேரமும் வெளிவரலாம்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் 20ஆம் நாளுக்குப் பின்னர், வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய தருணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைகளுக்கு எவ்பிஐ தடங்கலை ஏற்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (எவ்பிஐ) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகளை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர நிராகரித்துள்ளார்.

பலாலியில் இருந்து விமான சேவை – பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டம்

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஆறு பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத் தளபதியின் பரந்துரைகளுக்கமை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வை வழங்கியுள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பு – இராஜதந்திரிகளிடம் ரணில் உறுதி

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஐதேகவின் விருந்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள்

ஐதேகவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடந்த இராப்போசன விருந்தில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்சிசி கொடை உடன்பாட்டில் கையெழுத்திட மைத்திரி மறுப்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்றும், அதனை அடுத்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் எனவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோத்தாவை கொல்ல முயற்சி?

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு பாதாள உலக குழுவினருடன் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிறது.