மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அதிகாரம் படைத்த உள்நாட்டு பொறிமுறையே உருவாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட்டர்

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதல்ல, அது விசாரணை செய்யவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு

அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

தனது பயணம் சீனாவுடனான உறவை வலுப்படுத்துமாம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி கூறுகிறார்

சீனாவுக்கான தனது பயணம், சீன – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா  தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து அறிய வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்காவுடன் நிலையான இராணுவ உறவை விரும்புகிறதாம் சீனா

சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சாட்சியப்படுத்த புதிய செயலி அறிமுகம்

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக  கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app)  நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு

பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மைத்திரியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

லண்டன் பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளர் நானல்ல – என்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நேற்று லண்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.