மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியத் தூதுவர் சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்கான, பிரித்தானியாவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ் டௌரிஸ் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

படையினரிடம் சரணடைந்து காணாமற்போன 110 புலிகளின் விபரங்களை வெளியிட்டார் யஸ்மின் சூகா

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து  காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், தளபதிகள் 110 பேரின் விபரங்களை, ஐ.நாவின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூகா வெளியிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

ஜெகத் டயஸ் நியமனம் – கருத்து வெளியிடாமல் நழுவினார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கருத்துக்காக காத்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவ வந்தது அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் குழு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள, சொத்துக்கள், நிதி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்கா வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெகத் டயஸ் நியமனத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இறுதிக்கட்டப் போரில் அதிகளவான மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய, மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை, சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதற்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை – நல்லாட்சி அரசின் நயவஞ்சக நல்லிணக்க அணுகுமுறை

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில், நாளை நடத்த திட்டமிட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை செய்துள்ளது.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.