மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு தலையை வெட்டி மரணதண்டனை

சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்புப் பணியில் முதல்முறையாக ஐரோப்பிய இராஜதந்திரிகள்

சிறிலங்காவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஈடுபடவுள்ளனர்.

இராணுவ அழுத்தங்களால் பிரகீத் கடத்தல் குறித்த விசாரணைகளை நிறுத்த ரணில் உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப்  நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.

நெற்களஞ்சியமாகிறது மத்தல விமான நிலையம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அவரது சொந்த இடமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களைக் குழப்பியுள்ளார் விக்னேஸ்வரன் – ‘தினக்குரல்’ ஆசிரியர் கருத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரகீத்தை கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

மீரிஹானவில் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மைத்திரியின் பாதுகாப்பை பொறுப்பேற்றது சிறப்பு அதிரடிப்படை – புதிய சீருடையும் அறிமுகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நேற்றுக் காலை தொடக்கம் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.