மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பிரகீத் கடத்தல் – 7 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டுக்கு பாதகமான உடன்பாடுகளில் கையெழுத்திடமாட்டேன் – கோத்தா

நாட்டின் இறையாண்மையை  பாதிக்கும் எந்தவொரு உடன்பாட்டிலும், கையெழுத்திடுவதற்கு தான் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதவிக்கு வந்ததும் புதிய பிரதமர் – சஜித் அறிவிப்பு

தாம் பதவிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட, புதியவர் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

சஜித்தின் தேர்தல் அறிக்கை – மகாநாயக்கர்களைத் தூண்டி விடுகிறார் மகிந்த

ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம், எழுத்து மூல உறுதிப்பாட்டை, மகாநாயக்க தேரர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

‘கொலைகாரர்கள் கொல்கிறார்கள்’ – மங்கள

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் காயம்

கினிகத்தென்ன- பொல்பிட்டிய பகுதியில், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாள பரப்புரையில் ஈடுபட்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர்.

எம்சிசிக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பௌத்த பிக்கு

அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல்- ரெலோவின் முடிவு இன்று

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பெரும்பாலான கட்சிகள் முடிவெடுத்து விட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ரெலோ இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்க புளொட் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, புளொட் முடிவு செய்திருப்பதாக, அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ரெலோ, புளொட் ரணிலைச் சந்திக்கவில்லை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் தலைவர் த.சித்தார்த்தனும், மறுத்துள்ளனர்.