மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டோம் – விமல் வீரவன்ச

சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம்  மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சொந்த வீட்டிலேயே தங்கியிருக்கப் போகும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, தமது பதவிக்காலத்தில் அதிகாரபூர்வ வதிவிடமான, அதிபர் மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

ஏப்ரல் அல்லது மே மாதமே நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதேக அரசினால் வழங்கப்பட்ட 7000 நியமனங்கள், கடன் திட்டங்கள் இடைநிறுத்தம்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண (வயது-88) இன்று மாலை கண்டியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

33 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட ஹிஸ்புல்லா – ஐதேக அமைச்சர்களுக்கு கூச்சல்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஐதேக அமைச்சர்கள் பலருக்கும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சம்பிக்க உள்ளிட்ட மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, இன்று அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, அசோக அபேசிங்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

அமைச்சர் பதவியில் இருந்து அஜித் பெரேராவும் விலகினார்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேராவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.