மேலும்

சம்பிக்க உள்ளிட்ட மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, இன்று அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, அசோக அபேசிங்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ஐதேகவைச் சேர்ந்த மங்கள சமரவீர, கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம, ஹரின் பெர்னான்டோ, அஜித் பெரேரா ஆகியோர் நேற்று பதவி விலகினர்.

இந்த நிலையில், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான, அமைச்சர்  சம்பிக்க ரணவக்க இன்று  பதவி விலகியுள்ளார்.

அதேவேளை போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்கவும் இன்று பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *