மேலும்

ஏப்ரல் அல்லது மே மாதமே நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் மார்ச் 1ஆம் நாளுக்குப் பின்னரே கிடைக்கும்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே, மார்ச் 2ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டாலும், ஏப்ரல் அல்லது மே மாதமே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *