மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஆதரவாளர்களுடன் மகிந்த முக்கிய சந்திப்பு – 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

தேர்தல் முறை மாற்றம் குறித்து இரண்டு யோசனைகள்- அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்

சிறிலங்காவில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சென்னை – கொழும்பு இடையே நான்காவது விமானசேவையை தொடங்குகிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான விமான சேவைகளை நாளை முதல் அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் சென்னைக்கும் இடையில் நாளொன்றுக்கு நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம்

சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படாது – விஜேதாச ராஜபக்ச

19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரையில், சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுக்கத் தொடங்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார்.

வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.

முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம்

வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.

சுன்னாகத்தில் 73 வீத கிணறுகளில் எண்ணெய் மாசு – நீரைப் பருக வேண்டாம் என்கிறார் ஹக்கீம்

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் மாசுகளும் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளின் நீரைப் பருகுவதை தவிர்க்குமாறு சிறிலங்காவின் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.