மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம் – நாளை திறப்பு

சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது.

வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் மன்னார் ஆயர் – உள்ளக இரத்தக்கசிவுக்கு சிகிச்சை

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதனன்று மகிந்த – மைத்திரி சந்திப்புக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் – ஜோன் கெரி

சிறிலங்காவில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தால்,  அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

ஜோன் கெரியிடம் மைத்திரி முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தினார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

உள்நாட்டு விசாரணைக்கு நிபுணத்துவ உதவி வழங்குமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  பயணம் செய்த  போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.