மேலும்

சிறிலங்கா பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தினார் ஜோன் கெரி

ranil-john kerry (1)அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ பணியகமான அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

ranil-john kerry (1)

ranil-john kerry (2)

இந்தப் பேச்சுக்களில், அமெரிக்க இராஜாங்கச் செயலருடன், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *