மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஏழரை இலட்சம் டொலருக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஆலோசகரை நீக்கியது புதிய அரசு

மோசமான நடத்தையால் அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டொமினிக்  ஸ்டர்ரஸ் கானை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

கே.பி நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

விடுதலைப் புலிகளின் முன்னைய ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான தடை விலக்கப்படவில்லை

சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக விலக்கியுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு நிராகரித்துள்ளது.

மோடியின் பயணத் திட்டத்தில் யாழ், கண்டி, அனுராதபுர நகரங்களும் உள்ளடக்கம்

அடுத்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணம் செல்லவுள்ளதுடன் கண்டி அல்லது அனுராதபுரவுக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன- நிஷா பிஸ்வால்

சிறிலங்காவில் உண்மையாக நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை

கொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஆறுமாத காலஅவகாசம் – தடை தற்காலிகமாக தளர்வு

சிறிலங்காவின் மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வேதாராச்சி தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் – மிரட்டுகிறார் மகிந்த

தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இன்று சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் – படைபலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் இல்லை

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வு இன்று கோட்டே சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்றக் கட்டட மைதானத்தில் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

நம்பகமான பொறிமுறை உருவாக்காவிடின் அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் – மங்கள சமரவீர

சிறிலங்காவில் வலுவானதொரு நீதித்துறைப் பொறிமுறையை உருவாக்குவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை தவிர்க்க உதவும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.