யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து ஐ.நாவின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
தன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.
கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டத்துடன் தொடர்புடைய முப்படைகளினதும் தளபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் ஏப்ரல் 23ம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டால், 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகைமையை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை, இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இன்று விருப்பம் வெளியிட்டுள்ளன.