மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

13ஆவது திருத்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் – கொழும்பில் மோடி

சிறிலங்காவில் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார்.

மோடி – மைத்திரி பேச்சுக்களின் முடிவில் 4 உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் முடிவில் நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.

மோடியின் கையசைப்புக்காக காத்திருக்கும் தலைமன்னார் தொடருந்து நிலையம்

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கடல் விழுங்குகிறது

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரண்டு வாரங்கள் தொடர்ந்து இடைநிறுத்தினால், ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட பணிகளை கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும் என்று சீன கட்டுமான  நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 362 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.