மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கோத்தா ஆரம்பித்த பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டுமானப் பணியும் இடையில் நின்றது

பத்தரமுல்லையில் முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட, புதிய பாதுகாப்புத் தலைமையக வளாக கட்டட நிர்மாணப் பணிகள், நிறுத்தப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணத்துக்கான நிதி இல்லாமையாலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கிறார் திஸ்ஸ விதாரண

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும் எண்ணம், ஏதும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலையீடுகளை சகித்துக் கொள்ள முடியாது – முன்னாள் அமைச்சர் கூறுகிறார்

இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி கைது

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாமரைக் கோபுர நிர்மாணமும் மீளாய்வு – சீனாவுக்கு அடுத்த சோதனை?

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும், தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணி குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உதவியாளர்கள் இன்றி மகிந்தவுடன் தனியாகப் பேசினார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை நேற்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மோடியின் வடக்குப் பயணம் ஆரம்பம் – அனுராதபுரத்தில் வழிபாடு

சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுகாலை வடபகுதிக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்திய விமானப்படை உலங்குவானூர்திகளிலேயே தலைமன்னார், யாழ். செல்கிறார் மோடி

சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம், தலைமன்னார், அனுராதபுர ஆகிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.