மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மீண்டும் தலையெடுக்க முனையும் குடும்ப சர்வாதிகார ஆட்சி – தோற்கடிக்க அழைக்கிறார் சந்திரிகா

மீண்டும் நாட்டில் குடும்ப சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க முனையும் சக்திகளிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்ன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த்

சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

ஐ.நாவின் எத்தகைய உதவிகளும் வட மாகாணசபை ஊடாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐ.நாவினால்  மேற்கொள்ளப்படும் எத்தகைய உதவிகளும், வடக்கு மாகாணசபை ஊடாக வழங்கப்படமாட்டாது என்றும், மத்திய அரசாங்கத்தின் புனர்வாழ்வு அமைச்சு ஊடாகவே வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்கப் போகிறார் ரணில் – மகிந்த ராஜபக்ச

வடக்கு, கிழக்கு இல்லாத புதிய சிறிலங்காவை உருவாக்கவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார் சுசில்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்

அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்

சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.