மேலும்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை, சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் ஹுனிங், சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பீஜங்கில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் தலைவராக உள்ள வாங், இரு நாடுகளின் அரச தலைவர்களால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை செயற்படுத்தவும், உயர்தர பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காக சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழு தீவிர பங்களிப்புகளை வழங்க தயாராக உள்ளது என்றும்  வாங் மேலும் கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பிரதமர், சீனாவுடனான உறவுகளை சிறிலங்கா மிகவும் மதிக்கிறது என்றும், பொருளாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் பிற துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *