மேலும்

ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து வராது – கோத்தா உறுதி

தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச  நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு மீண்டும் உறுதியளித்தார்.

‘அரசாங்கம் மற்றும் அதன் அமைப்புகளின் எந்தவொரு பலவீனங்களையும் தோல்விகளையும் முன்னிலைப்படுத்துவதன் மூலம், நாட்டை முன்னேற்றுவதிலும், அதன் அபிவிருத்தியிலும் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அரசாங்கத்தின் எந்தவொரு தவறுகளையும் ஊடகவியலாளர்கள் துல்லியமாக எடுத்துரைப்பதை வரவேற்கிறேன்.

அரச ஊடகங்கள் நடுநிலையுடன், அரச தரப்பு மற்றும் அரசுக்கு எதிரான செய்திகளையும் தாங்கியதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *