மேலும்

திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் Harusame என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

151 மீற்றர் நீளமும், 4550 தொன் எடையும் கொண்ட இந்த போர்க்கப்பல் 165 மாலுமிகளுடன் சிறிலங்கா வந்துள்ளது.

மூன்று நாட்கள் இந்தப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி ஓஷிமா ரெரிஹிசா, சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி கொமடோர் சஞ்ஜீவ டயசுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

ஜப்பானிய போர்க்கப்பல் நாளை திருகோணமலையில் இருந்து புறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *