சிறிலங்கா அதிபர் தேர்தல் – நண்பகல் வரை 50 வீதம் வாக்களிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் இடம்பெற்று வரும் நிலையில், நண்பகல் வரை சராசரியாக 50 வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்திருந்தது. மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணி வரை, rராசரியாக 50 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தலை கண்காணிக்கும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு, கம்பகா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவ ஆகிய 7 மாவட்டங்களிலும் நண்பகல் வரை 50 வீத வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலக தகவல்கள் கூறுகின்றன.
வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.