மேலும்

டிசெம்பருக்குள் எட்கா குறித்த பேச்சுக்களை முடிக்க இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) தொடர்பான பேச்சுக்களை இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் இணங்கியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிரிஐ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

“ஆரோக்கியமான வகையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்களை டிசெம்பருக்குள் முடிக்க இரண்டு நாடுகளும் இலக்கை நிர்ணயித்துள்ளன.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *