மேலும்

பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே லண்டனில் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது.

கொமன்வெல்த் வர்த்தக மன்றத்தில் சிறிலங்கா அதிபர் நாளை உரையாற்றவுள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், சிறிலங்கா அதிபர் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *