மேலும்

ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?- கொழும்பில் மந்திராலோசனை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

”நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

நாளையும், நாளை மறுநாளும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

நாங்கள் நிலைமைகளை குறித்தும்,  பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் கலந்துரையாடுவோம்.

அதன் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா – இல்லை அதனை எதிர்ப்பதா என்று முடிவு செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *