மேலும்

கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவ முன்வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் மொத்தமுள்ள 25 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 பெற்றுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

அதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணி 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், ஜேவிபி 1 ஆசனத்தையும் வென்றுள்ளன.

சிங்களக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதைத் தடுக்கும் நோக்கிலும், சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தலில் இருந்து தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இங்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு ஆட்சியமைக்க, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *