மேலும்

சிறிலங்காவை விட்டு வெளியேறினார் கே.பி – ராஜித சேனாரத்ன தகவல்

K.Pவிடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் நுழைவாயில் வழியாக அவர், சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வைத்து சிறிலங்கா கைது செய்யப்பட்ட கே.பி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பில், இருந்து வந்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டநிலையில், நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அவர் எங்கு சென்றார் என்ற விபரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெளியிடவில்லை.

இதற்கிடையே, தான் நாட்டை விட்டுத் தப்பிச்செல்லவில்லை என்றும், கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை இல்லததிலேயே தங்கியிருப்பதாகவும், கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றிடம், கே.பி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *