ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த
ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச, யோசித ராஜபக்ச, லோகான் ரத்வத்த உள்ளிட்ட 14 பேர், 10 நாட்கள் பயணமாக கடந்த புதன்கிழமை இரவு ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
எனினும், இவர்களுக்கு ஜப்பானிய அரசாங்கமோ அல்லது ஜப்பானியப் பேரரசர் அகிஹிடோ அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜப்பானின் கோயாவில் உள்ள பௌத்த ஆலயத்தில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கே, மகிந்த ராஜபக்சவுக்கு அனைத்துலக ஒத்துழைப்புக்கான ஜப்பான்- சிறிலங்கா பௌத்த அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் நாள் வரை ஜப்பானில் தங்கியிருக்க மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.