மேலும்

பிமல் ரத்நாயக்கவுக்கு விரைவில் பெரிய பொறுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல் முறையில் அமைச்சுக்களை மறுசீரமைப்பதே அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் விவகாரம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க துறைமுகங்கள் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி  எழுப்பினார்.

இதற்குப்  பதிலளித்த அவர் “அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவ்வாறு நீக்கப்படவில்லை, ஆனால் சரியான நேரத்தில் அவருக்கு இன்னும் பெரிய பொறுப்பு கிடைக்கும்.

இது விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *