கனடிய நாடாளுமன்றத் தேர்தல்- 2 ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலையில்.
கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அறுதிப் பெரும்பான்மைக்கு 172 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் லிபரல் கட்சி, 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கொன்சர்வேட்டிவ் கட்சி 134 புளொக் குபெக்வா கட்சி 24 தொகுதிகளிலும், என்டிபி 9 தொகுதிகளிலும் பசுமைக் கட்சி 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
இந்த தேர்தலில் 5 ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 60 வீத வாக்குகளுடனும், யுவானிடா நாதன் 54 வீத வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், லியோனல் லோகநாதன் ஆகியார், இரண்டாமிடத்தில் உள்ளனர்.