மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அண்மையில் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதிய ஒதுக்கீடுகள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வெளியிட்ட கருத்து பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியது.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் செய்த முறைப்பாட்டை அடுத்து, இதுபற்றி சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அஞ்சல் வாக்களிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உரையாடியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அனைத்து காவல்துறை அதிகாரிகளுடனும் மெய்நிகர் முறையில் உரையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், முறைப்பாடு செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்குப் பதிவு ஏப்ரல் 24 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் பல்வேறு வழிகளில் இந்த வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்துகிறது.

அரசாங்கம் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தக்கூடாது, அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *