மேலும்

மேலும் பல சுவிஸ் தூதரக அதிகாரிகளை கைது செய்ய திட்டம்?

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய விடயத்தில், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும்  மேலும் பல அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் பணியாளரின் அலைபேசி பதிவுகளில் இருந்தும் அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்தும் இந்த நபர்களை குற்ற விசாரணைத் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது.

அவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என்ற கானியர் பிரான்சிசின் குற்றச்சாட்டு, முற்றிலுமாக இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *