மேலும்

சுவிஸ் அறிக்கைக்கு விரைவில் பதிலடி

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து. சுவிஸ் வெளிவிவகார சமஷ்டி திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் பதில் அளிக்கையை வெளியிடவுள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதை அடுத்து, சுவிஸ் வெளிவிவகார திணைக்களத்தினால், சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

‘இந்த அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருகிறோம், மிக விரைவில் சரியான பதில் அளிக்கை ஒன்று வெளியிடப்படும்” என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *