இந்திய – சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி VII கூட்டுப் பயிற்சி
இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து பங்கேற்கும், மித்ரசக்தி – VII கூட்டுப் பயிற்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அருன்ட் இராணுவ மையத்தில் இடம்பெற்று வருகிறது.
சிறிலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினரும் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று, இந்தக் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறப்புப் பயிற்சிகள் இடம்பெற்றன.
உலங்குவானூர்தி மூலமான தரையிறக்கம், இரகசியமான ஊடுருவுதல், காட்டுவழி சூட்டு பயிற்சி, மற்றும் நவீன வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல் போன்ற பயிற்சிகளில் இரண்டு நாடுகளின் படையினரும் நேற்று ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும், 14ஆம் நாள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.