மேலும்

சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம்

சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.

இதுகுறித்து சிறிலங்கா அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்றும், பதில் காவல்துறை மா அதிபர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *