கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்
கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்ய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘இதே போன்று சிலர் இங்கும், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.எனினும், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
கோத்தாபய ராஜபக்சவிடம் சவால் விடுபவர்கள் அரசியல் ரீதியாக அவருடன் சவால் விட வேண்டும் ‘ என்றும் அவர் கூறினார்.