மேலும்

எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம் – நீதிமன்ற வளாகத்தில் பெரும் பாதுகாப்பு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கலகம் அடக்கும் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்ப் பீரங்கி வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை தீர்ப்பு வழங்கப்படவுள்ள 301 ஆம் இலக்க நீதிமன்ற அறை நிரம்பியுள்ளதாகவும், நீதியரசர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *