மீண்டும் போட்டியிடுவாரா மைத்திரி? – புதுடெல்லியில் மனம் திறந்தார்
மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தாம் அவசரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.